தாஜுதின் கொலையை மூடி மறைத்த பொலிஸ் உயர் அதிகாரி


தாஜுதின் கொலை சம்பவம் தொடர்பான விசாரணையை மூடி மறைத்தமை தொடர்பாக முன்னாள் உயர் பொலிஸ் அதிகாரியொருவர் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாஜுதினின் மரணம் இடம்பெற்ற பின்னர் அது விபத்து என தெரிவித்து குறித்த மரணம் தொடர்பான விசாரணைகள் மூடி மறைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி இந்த விடயம் தொடர்பான விசாரணைக்காக அவர் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் குறித்த மரண சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் அது தொடர்பான விசாரணையை நடத்திய பொலிஸ் அதிகாரிகளிடமும் விசாரணை நடத்த குற்றப் புலனாய்வு பிரிவினர் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Share this article :
சமீபத்திய செய்திகள்
முகப்புத்தகத்தில் லைக் செய்யுங்கள்
 
Support : Website | Mohamed Hasni | Mohamed Solution
Proudly powered by Rajarata Media
Copyright © 2016. my desgin - All Rights Reserved